லேபிள்கள்

சனி, 30 ஆகஸ்ட், 2025

தமிழ் மொழி சிறப்பு

 


தமிழ் மொழியின் சிறப்பு  பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக்கொண்டிருக்கின்றது.

தமிழ் மொழி சிறப்பு 

காலங்கள் மாற்றம் அடைந்தாலும், உலகின் கண்டங்கள் பல அழிந்து இருந்தாலும் என்றென்றும் அழியாத செல்வமாய் விளங்குவது தமிழ் மொழியே. தமிழ் மொழியானது தமிழ் பேசும் அனைவருக்கும் தாய் மொழியாக சிறந்து விளங்குகிறது. தமிழ் மொழியானது 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபினை கொண்டுள்ள நூல் என்று சொல்லப்படுகிறது.

தமிழ் என்னும் சொல்லின் பொருளுக்கு இனிமை, எளிமை, நீர்மை என்று பொருளாகும்.

தமிழ் மொழியானது இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் ஆட்சி மொழியாகவும், பேசப்படும் சிறந்த மொழியாக உள்ளது தமிழ் மொழி.

அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் சிறப்புகளை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..! 

தாய் நாடான தமிழ்நாட்டினை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநிலத்தில் உள்ள மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழ் மொழியை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.

ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியும், மலையாள மொழியும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் மொழியாகவே வழங்கி வந்துள்ளனர்.



தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகிறது:

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழ் மொழி சிறந்து விளங்கக்கூடிய மொழியாக உள்ளது.

19-ம் நூற்றாண்டு மற்றும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும்அனுப்பிவைக்க பட்டனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் தமிழ் மொழி சிறந்து ஓங்கியது.

இவர்களின் வழி வந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு போன்ற நாடுகளில் சிறப்புமிக்க மொழியான தமிழ் மொழி பேசப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, கயானா, பிசி, சுரினாம், திரினிடாடு, உடொபாகோ போன்ற நாடுகளிலும் சிலர் தமிழர் இனத்தினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த நாடுகளில் இன்றும் தமிழ்மொழியை பேசுவது இல்லை.

தமிழ் சிறப்பு:

தமிழில் உள்ள எழுத்துகளின் ஒலிகள் இயற்கை நடையிலும் மிக எளிமை முறையிலும் அமைந்திருப்பதால் எந்த சிக்கலின்றி தமிழ் ஒலிகளை ஒலிக்கமுடிகிறது. தமிழ் மொழியை நாம் வாயில் உச்சரித்து பேசும்போது குறைந்தளவு காற்றே நமது உடலிலிருந்து வெளியாகிறது.

இதற்கு உதாரணத்திற்காக சமஸ்கிருத மொழியை நாவில் உச்சரித்து பேசும் போது நம்முடைய உடல் பகுதியில் இருந்து அதிக ஆக்சிஜன் வெளியாகுவதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் உண்டாகுவதாக மொழியியலர் கூறுகிறார். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள் ஆவார்.

தமிழ் மொழியை சிறப்பித்தவர்கள்:

1.“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்என்று தமிழ் மொழியை சிறப்பித்தவர்            பாரதியார்.

2.“தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்என்று தமிழை சிறப்புமிக்க உணர்த்தியவர் பாரதிதாசன்.

3. தமிழ் மொழியை நன்கு கற்றுத்தேர்ந்து அதனுடைய சிறப்பினை உணர்ந்தவர் தான் மேலை நாட்டு அறிஞர் ஜி.யு.போப். இவர் இறக்கும் முன் தன்னுடைய கல்லறையில்ஒரு தமிழ் மாணவன்என்று எழுத செய்துள்ளார்.

இது போன்று தமிழ் மொழியின் சிறப்புகளை பலரும் புகழ்ந்து கூறியுள்ளனர்.

தமிழின் வளமைகள்:

உலக இலக்கியங்களில் சங்க இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ள நூலாக பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கிழ்கணக்கு போன்ற நூல்கள் இன்றும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து கொடுக்கின்றன.

தமிழ் மொழியில் உள்ள வளத்தை போன்று உலகில் உள்ள வேறு எந்த மொழியிலும் இல்லை.

தமிழ் மொழியில் மிக பழமையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியம் இலக்கணமானது எழுத்து, சொல், பொருள் போன்ற மூன்று இலக்கணத்தினையும் கூறுவதால் தமிழ் மொழியில் தொல்காப்பியம் சிறந்து விளங்கக்கூடிய நூலாக இருக்கிறது.



இந்திய நாட்டில் செம்மொழி அடைந்த அங்கீகாரம்:

இந்திய மற்றும் வெளி நாடுகளில் உள்ள பல தமிழ் அமைப்புகள் மற்றும் அறிஞர்களின் பல நாட்களின் முயற்சியை தொடர்ந்து தமிழ் மொழியானது ஒரு செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தின் போது, அப்போதைய இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் 2004 சூன் 6 ஆம் நாள் தமிழை செம்மொழியாக அறிவித்தார்.

உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் சிறப்புமிக்க தமிழ் மொழியானது இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

தமிழ் மொழியானது தனித்து இயங்கக்கூடிய மொழியாகும். காலத்தால் என்றென்றும் அழியாத செழுமை வாய்ந்த மொழித்தான் தமிழ் மொழியாகும். இத்தகைய வளமை பொருந்திய நமது தாய் மொழியான தமிழ்மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம். நன்றி வணக்கம்..!

பிழைக்கத் தெரிந்தவன் எப்படியும் பிழைத்துக்கொள்வான்

 


பிழைக்கத் தெரிந்தவன்  எப்படியும் பிழைத்துக்கொள்வான்.

இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்..

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.

"எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும் "

இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."

" நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்.

நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு " அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.

" வெரி குட் .இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது ..500 ரூபாய் ஃபீசை எடுங்கள் ".

உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.

" டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க " என்றார்.

" நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்.

" அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே " என்று அலறினார் இவர்..

" வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க "

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .

" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்"

" சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர்

"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.

" வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய் "

பொழைக்க தெரிஞ்சவனுக்கு படிப்பாவது ஒன்னாவது.


கொட்டுவது தேளின் குணம்

 


கொட்டுவது தேளின் குணம் 

நல்லவராய் வாழ்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை விளக்கும் புத்தத் தத்துவக் கதைகளில் ஒன்று

தேளின் குணம் கொட்டுவது என்று தெரிந்தும் தேளையும் அரவணைக்க நினைப்பது நல்லவனின் விதி

ஒரு முறை ஆற்றைக்கடக்க யாரேனும் தனக்கு உதவ மாட்டார்களா என்று போவோர் வருவோரிடமெல்லாம் வேண்டி நிற்கிறது ஒரு தேள்.

தேளின் குணமறிந்து பல உயிரினிங்களும் அதை மறுத்து, தப்பித்தால் போதுமென்று கடந்து செல்லும்போது, ஆற்றைக் கடக்க முனையும் ஒரு ஆமை மட்டும் இந்தத் தேளின் மீது பரிதாபம் கொண்டு தன் மீது ஏற்றிக்கொண்டு செல்கிறது.

சிறிது தூரம் அமைதியாக வந்த தேள் சும்மா இருக்கமாட்டாமல் ஆமையின் ஓட்டின் மீது மெல்ல கொட்டிப்பார்க்கிறது.

ஆமைக்கு ஓடு என்பதால் உறைக்கவில்லை. மீண்டும், மீண்டும் கொட்டிப் பார்த்துவிட்டு, “என்னடா இந்த ஆமையிடம் ஒரு அசைவும் இல்லையே ... 4 முறைகள் கொட்டியும் எந்த அசைவும் இல்லையே என்ற ஆச்சரியத்தில், பொறுக்க முடியாமல் அந்த ஆமையிடமே கேட்டு விடுகிறது.

அதற்கு ஆமையும், நீ என்னைக் கொட்டியதே எனக்குத் தெரியாதே ...  என் ஓட்டின் மீது கொட்டினால் எனக்கு வலிக்காதே ..” என்றது அப்பாவியாய்.

அதற்கு அந்த தேளும் விடாமல், அப்ப உனக்கு எங்க கொட்டினால் வலிக்கும் என்று ஆர்வமாகக் கேட்க, அந்த ஆமையும் என் கழுத்துப் பகுதியில் கொட்டினால் மட்டுமே என்னால் வலியை உணர முடியும்என்று சொல்லியவாறே கழுத்தை உள்ளிழுக்க முனைந்தது.

அதற்குள் தேளும் ஆமையின் கழுத்தைப் பார்த்து கொட்டுவதற்கு முயல, கோபம் கொண்ட ஆமை சட்டென்று தண்ணீரில் மூழ்க, தேள் இறந்து மிதக்க ஆரம்பித்தது

Kanjeevaram Natarajan Annadurai

  Arignar Anna, whose full name is Kanjeevaram Natarajan Annadurai, was a prominent Indian politician, writer, and leader in the Dravidian m...