லேபிள்கள்

சனி, 31 ஜனவரி, 2026

நான் உயிருடன் இருக்கிறேன்

 நான் உயிருடன் இருக்கிறேன்


பிரபலங்கள் கலந்துகொண்ட ஒரு விருந்தில், ஒரு முதியவர் ஒரு குச்சியின் உதவியுடன் மேடைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார், "நீங்கள் இன்னும் அடிக்கடி மருத்துவரிடம் செல்கிறீர்களா?"

அந்த முதியவர் சொன்னார், "ஆமாம், நான் அடிக்கடி செல்கிறேன்!"

நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார், "ஏன்?"

அந்த முதியவர் சொன்னார், "நோயாளிகள் அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டும்! அப்போதுதான் மருத்துவரால் பிழைக்க முடியும்!"

அந்த முதியவரின் நகைச்சுவையான பேச்சைக் கேட்டு பார்வையாளர்கள் கைதட்டினார்கள்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீண்டும் கேட்டார்: "நீங்கள் மருந்தாளரிடம் மீண்டும் செல்கிறீர்களா?"

அந்த முதியவர் பதிலளித்தார், "நிச்சயமாக. ஏனென்றால் மருந்தாளரும் வாழ வேண்டுமே."

இது பார்வையாளர்களை மேலும் கைதட்ட வைத்தது.

பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார், "அப்படியானால், மருந்தாளர் கொடுக்கும் மருந்தை நீங்கள் சாப்பிடுகிறீர்களா?"

அந்த முதியவர் சொன்னார், "இல்லை! நான் அதை அடிக்கடி தூக்கி எறிந்துவிடுவேன், ஏனென்றால் நானும் வாழ வேண்டுமே!!"

இது பார்வையாளர்களை இன்னும் அதிகமாக சிரிக்க வைத்தது.

இறுதியாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூறினார்: "இந்த நேர்காணலுக்கு வந்ததற்கு நன்றி"

அந்த முதியவர் பதிலளித்தார்

வரவேற்கிறேன்! எனக்குத் தெரியும், நீங்களும் வாழ வேண்டுமே!"

இது பார்வையாளர்களை மிகவும் சிரிக்க வைத்து ஆரவாரம் செய்ய வைத்தது, அது நீண்ட நேரம் நீடித்தது.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றொரு கேள்வியைக் கேட்டார், "உங்கள் வாட்ஸ்அப் குழுவில் நீங்கள் அடிக்கடி சுறுசுறுப்பாக இருக்கிறீர்களா?"

அந்த முதியவர் பதிலளித்தார்: "ஆமாம், நான் சில சமயங்களில் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருப்பேன், ஏனென்றால் நானும் வாழ விரும்புகிறேன்! நான் இதைச் செய்யவில்லை என்றால், நான் இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்து, குழு நிர்வாகி என்னை நீக்கிவிடுவார்!"

இந்த நகைச்சுவை உலகில் முதல் இடத்தைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது, ஏனென்றால் அனைவரும் வாழ வேண்டுமே!

எனவே, என் அன்பான நண்பர்களே, புன்னகைத்துக்கொண்டே இருங்கள், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் செய்திகளையும் எதிர்வினைகளையும் தொடர்ந்து அனுப்புங்கள்!

தொடர்பில் இருங்கள்!

நீங்கள் உயிருடன், மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள் (உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்)

scammers using email collecting personal Information; awareness

 scammers using email collecting personal Information; awareness



மோசடி செய்பவர்கள் ஃபிஷிங் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி, சட்டப்பூர்வமான நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, அவசர கோரிக்கைகளை முன்வைத்து அல்லது பீதியடைந்த செயல்களைத் தூண்டுவதற்கு போலி வெகுமதிகளை வழங்குவதன் மூலம் தனிப்பட்ட தரவைத் திருடுகிறார்கள்
முக்கிய எச்சரிக்கைகளில் அவசர/அச்சுறுத்தும் மொழி, சந்தேகத்திற்கிடமான அனுப்புநர் முகவரிகள் மற்றும் பொதுவான வாழ்த்துகள் ஆகியவை அடங்கும். பல காரணி அங்கீகாரத்தை (MFA) இயக்குவதன் மூலமும், இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்ப்பதன் மூலமும், சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களைப் புகாரளிப்பதன் மூலமும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 
ஃபிஷிங் மின்னஞ்சல்களில் கவனிக்க வேண்டிய முக்கிய கூறுகள்:
  • அவசர அச்சுறுத்தல்கள்: உங்கள் கணக்கு இடைநிறுத்தப்படும் அல்லது நீங்கள் ஒரு பரிசை வென்றுள்ளீர்கள் என்று கூறி, விரைவான, உணர்ச்சிபூர்வமான பதில்களைத் தூண்டும்.
  • சந்தேகத்திற்கிடமான அனுப்புநர்: பெயர் சரியாகத் தெரிந்தாலும், "அனுப்புநர்" மின்னஞ்சல் முகவரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டொமைனுடன் பொருந்தவில்லை.
  • தீங்கிழைக்கும் இணைப்புகள்/இணைப்புகள்: உண்மையான இலக்கைக் காண கிளிக் செய்வதற்கு முன் இணைப்புகளின் மீது வட்டமிடுங்கள்; எதிர்பாராத இணைப்புகளை ஒருபோதும் பதிவிறக்க வேண்டாம்.
  • முக்கியமான தகவலுக்கான கோரிக்கை: சட்டபூர்வமான நிறுவனங்கள் உங்கள் கடவுச்சொல், சமூகப் பாதுகாப்பு எண் அல்லது கிரெடிட் கார்டு தகவலை மின்னஞ்சல் வழியாக ஒருபோதும் கேட்காது.
  • உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி:
  • சுயாதீனமாக சரிபார்க்கவும்: ஒரு செய்தி விசித்திரமாகத் தோன்றினால், நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் அல்லது நிறுவனத்தை நேரடியாக அழைக்கவும் - சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சலில் உள்ள தொடர்புத் தகவலைப் பயன்படுத்த வேண்டாம்.
  • MFA ஐப் பயன்படுத்தவும்: இரண்டாம் அடுக்கு பாதுகாப்பை வழங்க அனைத்து முக்கிய கணக்குகளிலும் பல காரணி அங்கீகாரத்தை இயக்கவும்.
  • மென்பொருளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்: உங்கள் பாதுகாப்பு மென்பொருள் மற்றும் உலாவிகளைத் தொடர்ந்து புதுப்பிக்கவும். 
நீங்கள் மோசடி செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்:
நீங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டால், அதைப் புகாரளிக்கவும் மீட்புத் திட்டத்தைப் பெறவும் IdentityTheft.gov ஐப் பார்வையிடவும் . நீங்கள் கடவுச்சொல்லைக் கொடுத்திருந்தால், அதைப் பயன்படுத்திய அனைத்து தளங்களிலும் உடனடியாக அதை மாற்றவும். 

சனி, 24 ஜனவரி, 2026

நமது பாரம்பரியத்தை அதில் மறைந்துள்ள அறிவியலையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்...



நமது பாரம்பரியத்தை அதில் மறைந்துள்ள அறிவியலையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்...

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1. எனவே தான் தமிழர்கள் சித்திரை 1ஐ புத்தாண்டாக கொண்டாடினர்..

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் சொல்லி வைத்த நமக்குத்தெரியாத உண்மைகள்.

சித்திரை 1

ஆடி 1

ஐப்பசி 1

தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்.. பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1" ஆடி பிறப்பு.(solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கல். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும்,  அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை  (vernal equinox) - புத்தாண்டு.

ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.

ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.

தை 1(winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

நமது முன்னோர்கள்  தன்னிகரற்ற  அறிவாளிகள், மகத்தானவர்கள்.

‘திருந்த வேண்டியது நாம்தான்’ - உலகத்தை மாற்றியமைப்பது சாத்தியமல்ல


 ‘திருந்த வேண்டியது நாம்தான்’ - உலகத்தை  மாற்றியமைப்பது சாத்தியமல்ல

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. 

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். 

வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே.. நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை. அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள். சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார். பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே.. நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி. 

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது.

வெள்ளி, 23 ஜனவரி, 2026

ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவில் தலையாட்டி பொம்மையும்..!!

 


தமிழக சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், பண்டைய காலம் தொட்டு, இன்றைய ஆட்சியாளர்கள் வரையிலும், யாருடைய ஆட்சி பொற்காலமாக இருந்தது என்று கேட்டால், வரலாற்றைப் பற்றி அறிந்த அனைவரும் சொல்வது, சோழர்களின் ஆட்சிதான் என்று தயங்காமல் சொல்வார்கள்.

அதிலும் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தான் உண்மையிலேயே தமிழகம் பொற்காலமாக விளங்கியது என்று அனைவரும் சொல்வார்கள்.

அவருடைய ஆட்சியில் நாட்டு மக்கள் மட்டுமல்லாது, கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், கலாச்சாரம், நாகரீகம், விவசாயம், ஆன்மீகம், உணவுமுறை, ராணுவம், போர்ப்படை என அனைத்து துறைகளும் மற்ற நாடுகளுக்கு ஒர் முன் மாதிரியாகவே விளங்கியது.

ராஜ ராஜ சோழன் ஆட்சி சரி, இப்படி உலகமே மெச்சும் வகையில், சாளுக்கிய தேசம், ஈழம், கடாரம் என கீழை நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, சுமார் 29 ஆண்டுகள் தன்னுடைய ஆட்சியை பொற்காலமாக வைத்திருந்த ராஜ ராஜன் ஏன் வட இந்தியாவை மட்டும் விட்டு, மெனக்கெட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டு, இன்றைக்கு உலகமே அன்னாந்து பார்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான், இது எப்படி சாத்தியமானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் மண்டையை பிய்த்துக்கொள்கின்றனர்.

தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்து அதை கைப்பற்றிய பின்னர் தான், அங்குள்ள சிவாலயங்களை பார்த்து பிரமித்துப் போய் நாமும் ஏன், இதே போல் ஒரு சிவாலயத்தை மிகப்பிரமாண்டாக எழுப்பக்கூடாது என்று தன்னுடைய மனதில் கேள்வியை எழுப்பினான். அதற்கு பதிலாக தோன்றியதே தஞ்சை பெருவுடையார் என்னும் பிரகதீஸ்வரர் ஆலயம்.



 ராஜராஜன் வியந்த கோவில் தான் படையெடுத்துச் சென்ற நாடுகளில் கண்ட சிற்பக்கலையில் கவரப்பட்டு அதை எல்லாம் சேர்த்து வைத்து ஒரு உன்னதமான கலைப்பொக்கிஷத்தை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி, முனைப்புடன் இந்த கோயிலை ராஜ ராஜன் உருவாக்கி இருக்கவேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

அதோடு, பல்லவ மன்னனான ராஜ சிம்மனால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டிருந்த கயிலாதநாதர் கோயிலின் கட்டமைப்பும், சிற்ப வேலைப்பாடுகளும் ராஜ ராஜ சோழனின் மனதை பெரிதும் கவர்ந்தன.



தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!!
தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ??
இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க !
களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை !
கொட்டங்கச்சி எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது
அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள்
அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். !
இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.!
நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க...!
தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது.
அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மணலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.
சாதாரண ஆற்று மணலை விட , காட்டாறுகளில் காணப்படும் மணல் பாறைத்துகள்கள் அதிகம் நிறைந்தது, மேலும் சாதாரண மணலை காட்டிலும் கடினமானது.
கோவிலை கட்டுவதற்குமுன் அந்த மணலை கொண்டு அடியில் நிரப்பியிருக்கிறார்கள்.
இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் போர் போடும் வேலையை உடனடியக நிறுத்திவிட்டார்கள் !
ஏனென்றால் ஆயிரம் வருடங்களாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களை தாங்கி , நான்குபுறமும் அகலிகளால் சூழப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அதுதான் !
இவ்ளோ பெரிய கோவிலுக்கு மணலை கொண்டு அஸ்திவாரம் அமைக்க சோழ தேச பொறியாளர்கள் என்ன முட்டாளா?
அந்த அதி அற்புத தத்துவமும், சோழர்களின் அறிவின் உச்சமும் அங்குதான் வெளிப்படுகிறது !
அகலிகளால் சூழப்பட்டுள்ள தீவுபோன்ற அமைப்பில் காட்டாற்று மணல் அஸ்திவாரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் கற்றளியானது எத்தகைய பூகம்பங்கள் வந்தாலும் அந்த மணல்பரப்பின் மீது அமைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய நிலை தடுமாறினாலும் தானே தன்னை நேராகிக்கொள்ளும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது !
இப்போது அந்த தலையாட்டி பொம்மையை நினைவில் கொள்ளுங்கள்.
அந்த பொம்மையை சாய்த்துவிட்டால் எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பால் ஆடி ஆடி நேராகி விடுகிறதோ அதே போல பெரிய கோவிலும் எவ்வளவு பெரிய பூகம்பத்தால் அசைய நேரிட்டாலும் தானாகவே சமநிலைக்கு வந்துவிடும் !

சோழ தேச விஞ்ஞானிகளின் அறிவிற்கு உலகில் வேறு எவரும் ஈடாகார் என்பதற்கு இது ஒன்று மட்டுமே சான்று



மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது பகீர் தகவலாக உள்ளது

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது பகீர் தகவலாக உள்ளது.

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. 

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. 

அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. 

அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். 

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. 

`ஒரு மனிதன் தேவ நிலையை அடைய வேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது? 

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்மையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. 

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. 

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். 

குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். 

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். 
கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். 

எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். 
அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. 

ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். 

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.
மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.
மன்னித்து மகான் ஆகுங்கள், 
மன நோய்களில் இருந்தும் விடுபடுங்கள்.
வாழ்க வளத்துடன்

ஒரு YouTube காணொளி


 ஒரு YouTube காணொளி

அதைப் பார்த்து உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு இறந்த சகோதரி

சகோதரியை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குவோம். 

முதலில் இந்ந நிகழ்வு குறித்து ஆராய்வோம் 

ஒரு யூட்யூப் சேனலில், வெங்காரம் (BORATE) எப்படி அதை சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் வாரம் இரண்டு கிலோ எடை குறையலாம் என்பது குறித்த குறுங்காணொளி கிடைக்கிறது. 

பொதுவாக, சித்த மருத்துவத்தில்

சித்த மருத்துவர்கள் வெங்காரத்தை 

சிறுநீர் பாதை தொற்று,இரைப்பைப் புண், தோல் நோய் சிகிச்சை ஆகியவற்றில் உபயோகிக்கின்றனர்.

சித்த மருத்துவம் (BSMS) முறையாகப் பயின்று பட்டம் பெற்ற மருத்துவர்களுக்குத் தெரியும். வெங்காரத்தை அப்படியே மருந்தாக உபயோகிக்க முடியாது. மாறாக 

அதை சரியான முறையில் சுத்திகரிக்க வேண்டும். மேலும், ஒரு மருந்து வழங்கப்படும் போது 

அதற்குரிய 

சரியான நோய் (RIGHT DISEASE) 

சரியான மருந்து ( RIGHT MEDICINE) 

சரியான அளவு ( RIGHT DOSE) 

சரியான வழியில் ( RIGHT ROUTE) 

சரியான கால அளவில் வழங்கப்பட( RIGHT REGIMEN) வேண்டும். 

அதை விடுத்து பொதுவாக காணொளியில் 

வெங்காரம் சாப்பிட்டால் எடை குறையும் 

என்று கூறுவதில் உள்ள பிரச்சனையைத் தான் இப்போது காண்கிறோம்.

பாராசிட்டமால் குழந்தைகளுக்கு கொடுத்தால் காய்ச்சல் குறையும் என்று கூறுவதைப் பார்த்து விட்டு 

தன் இஷ்டத்துக்கு ஒரு டோஸ் அளவில் 

பிறந்த குழந்தைக்கு பாராசிட்டமால் கொடுத்தால் அதுவும் ஆபத்தில் தான் முடியும்.

நோய் ஏற்பட்டால் 

அதற்குரிய மருத்துவரை சந்தித்து சிகச்சை பெற வேண்டும் என்ற ஒரு சாதாரண அடிப்படை அறிவு நம்மிடையே இல்லாமல் போனது தான் இங்கு பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகிறது. 

வெங்காரம் சாப்பிட்டு எடை குறைக்க வேண்டும் என்று அந்த சகோதரி விரும்பியிருந்தால், 

ஒரு சித்த மருத்துவரை நேரில் சந்தித்து 

வெங்காரம் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டு எடை குறைப்புக்கு அவரிடம் முறையான மருத்துவம் கேட்டிருக்கலாம். 

வெங்காரம் (BORIC ACID) 

அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே 

இந்த சகோதரி வெங்காரத்தை சாப்பிட்டதால் அதனால் நஞ்சுத்தன்மை உண்டாகி 

கடும் வயிற்றுப் போக்கு

குடல் இரைப்பைப் புண் 

அதனால் ஏற்பட்ட ரத்தப் போக்கு

சிறுநீரக செயலிழப்பு 

ஆகியவற்றால் உயிரிழந்திருக்க வேண்டும். 

போரேட் பவுடரில் 

மெடிக்கல் கிரேடு பவுடர் என்றும் 

களைக்கொல்லிக்கென தனியாகவும் விற்கப்படுகிறது. 

சகோதரி எதை வாங்கி எவ்வளவு அளவில் சாப்பிட்டார் என்று தெரியவில்லை.

மக்கள் உணர வேண்டிய விஷயம் 

உலகின் எந்த மூலையில் நீங்கள் வசித்தாலும் சரியே..

நீங்கள் மருந்து என்று 

எதை உட்கொண்டாலும் சரியே

மருந்தென்று உண்டென்றால் 

அதற்கு சாதகமான விளைவு உண்டென்றால் 

கட்டாயம் பாதகமான பக்கவிளைவுகள் 

இருந்தே தீரும். 

பக்கவிளைவுகள் இன்றி மருந்து தருகிறேன் என்று யாரும் கூறினால் அதை தயவு கூர்ந்து நம்பாதீர்கள். 

நம்பினால் கை சேதம் உங்களுக்கு மட்டுமே. 

ஒரு மருந்தின் சாதக பாதக அம்சங்களை 

அறிந்து வழங்கும் அனுபவமும் அறிவும் அந்த மருந்தைப் பற்றிக் கற்றறிந்த மருத்துவர்களுக்கு உண்டென்று நம்புங்கள். 

சாட் ஜிபிடி 

ஏ ஐ ஜெமினி 

உன் குழாயடி (YOU TUBE)  சண்டைகள் 

இண்ஸ்டா கிராம திண்ணை பேச்சுகள் 

இதையெல்லாம் மட்டுமே  நம்பினால் 

சேதம் நமக்குத் தான்.

உடல் எடை குறைப்புக்கு 

மாவுச்தத்தைக் குறைக்க வேண்டும் 

தினசரி கலோரி அளவுகளை குறைக்க வேண்டும் 

இனிப்பு சுவை கொண்டவற்றை நிறுத்த வேண்டும் 

புரதம் + ஆரோக்கிய கொழுப்பை சேர்க்க வேண்டும். 

நடைப்பயிற்சி + நல்ல உறக்கம் 

இவற்றால் உடல் எடை குறையும். 

ஆனால் இதையும் வல்லுனர் கண்காணிப்பில் செய்வது தான் உங்களுக்கு நல்லது. 

யூட்யூப் இண்ஸ்டா முகநூலில் இயங்கும் பிறர்மதி மீது தாக்கம் (INFLUENCERS) செலுத்துபவர்களின் கனிவான கவனத்துக்கு 

மருத்துவம் சார்ந்த தகவல்கள் 

குறிப்பாக ஆபத்தான மருந்துகள் குறித்து தகவல் அளிக்கும் போது அதை பொதுமக்கள் எளிதில் எந்த மருத்துவ அறிவுரையும் இல்லாமல் உட்கொள்ளுமாறு 

பரிந்துரை செய்யக் கூடாது. 

துறை சார்ந்த வல்லுனரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். 

அன்பிற்குரிய சமூக ஊடக வாசிகளின் கனிவான கவனத்திற்கு 

யூட்யூப் பாருங்கள் 

இண்ஸ்டா பாருங்கள் 

அனைத்தையும் படியுங்கள்

கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் உங்களின் உடல் உயிர் விஷயத்தில் ஒரு முயற்சி செய்யும் முன் 

துறைசார்ந்த மருத்துவ வல்லுனரிடம் 

கலந்தாலோசனை செய்யுங்கள். 

விழித்துக் கொள்ளுங்கள்

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்

நன்றி

Dr. Farook Abdulla, MD,
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths