லேபிள்கள்

புதன், 25 பிப்ரவரி, 2026

அந்நியர்களிடம் கருணை காட்டுவது கூடுதல் அல்ல… அது தான் வாழ்க்கையின் மையம்.

 



நான் ஒரு டாக்சி ஓட்டுநர்.

கடந்த வாரம் இரவு 8 மணிக்கு ஒரு வயதான மனிதரை காரில் ஏறியவுடன் சொன்னார்:

“இன்று இரவு ஐந்து இடங்களுக்கு என்னை கொண்டு செல்ல வேண்டும். ரூ.10,000 தருகிறேன். எதுவும் என்னிடம் கேட்க கூடாது. 

அவர் ஐந்து முகவரிகளை கொடுத்தார்.


முதல் இடம்: நகர புறப்பகுதியில் ஒரு வீடு.

அவர் காரிலேயே இருந்தார். அந்த வீட்டை பத்து நிமிடம் பார்த்துக்கொண்டே இருந்தார். அமைதியாக அழுதார்.

“சரி. அடுத்தது.”

நான் ஓட்டினேன்.


இரண்டாவது இடம்: ஆரம்பப் பள்ளி.

வெறிச்சோடி. இருள்.

அவர் இறங்கி விளையாட்டு பூங்காவுக்கு நடந்தார். ஒரு ஊஞ்சலில் உட்கார்ந்தார். இருபது நிமிடம் இருந்தார்.

திரும்பி வந்தார்.

“நான் இங்கே 38 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தேன். என் வாழ்க்கையில் கிடைத்த சிறந்த வேலை.”


மூன்றாவது இடம்: ஒரு சிறிய உணவகம். கடை மூடும் சமயம்.

உள்ளே சென்றார். காபி ஆர்டர் செய்தார். ஒரு மேசையில் தனியாக உட்கார்ந்தார். குடிக்கவே இல்லை. சுற்றி பார்த்துக்கொண்டே இருந்தார். பதினைந்து நிமிடம்.

திரும்பி வந்தார்.

“1967-ல் நான் என் மனைவியை முதலில் சந்தித்த இடம் இது.”


நான்காவது இடம்: கல்லறை.

அவர் ஒரு கல்லறை அருகே நின்றார். அதோடு பேசினார். என்ன சொன்னார் என கேட்கவில்லை. முப்பது நிமிடம்.

திரும்பி வந்தபோது கண்கள் சிவந்திருந்தது.

“என் மனைவி. மூன்று வருடம் ஆகிறது.”


ஐந்தாவது இடம்: மருத்துவமனை.

காரை நிறுத்தச் சொன்னார். “இது கடைசி இடம்.”


அவர் என்னைப் பார்த்தார்.

“இப்போ சொல்றேன். எனக்கு Stage-4 புற்றுநோய். இன்னும் சில சில நாட்கள் மட்டுமே இருக்கலாம். இன்று என் முழு வாழ்க்கையையும் கடைசியாக பார்க்கணும்னு நினைத்தேன்.”


நான் அங்கேயே அழ ஆரம்பித்தேன்.


“அந்த வீடு — என் குழந்தைகளை வளர்த்த இடம்.


அந்த பள்ளி — என் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்ட இடம்.


அந்த ஹோட்டல் — நான் காதலித்த இடம்.


அந்த கல்லறை — நான் மனைவியிடம் விடைபெற்ற இடம்.


இங்கே இந்த மருத்துவமனை — நான் இன்று அனுமதியாக போகும் இடம்.


அவர் 10,000 கொடுத்தார்.

“என் வாழ்க்கை முழுவதையும் எனக்காக ஓட்டிச்சென்றதுக்கு நன்றி. இனி என்னை நல்லவனாக பார்க்கும் கடைசி அந்நியர் நீங்கதான். அது மென்மையாக இருக்கணும்னு நினைத்தேன். நீங்க அதை மென்மையாக்கிட்டீங்க.”

நான் பணத்தை மறுத்தேன்.


அவர் வலியுறுத்தினார்.

“தயவு செய்து. இதை கொடுக்க எனக்கு யாரும் இல்ல. என் குழந்தைகள் என்னோட பேசவே மாட்டாங்க. நண்பர்கள் யாரும் இல்லை. மூன்று மணி நேர அன்பு நீங்க தந்தீங்க. அது 10,000-க்கும் மேலானது.”


திரும்பி கேட்டார்: “உங்க பெயர்?”

“முகிலன்.”

“நன்றி, முகிலன். என் வாழ்க்கையின் கடைசி நல்ல விஷயம் நீங்க.”

அவர் மருத்துவமனைக்குள் நடந்துசென்றார்.


நான் காரில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கதறி அழுதேன்.

அடுத்த நாள் மீண்டும் சென்றேன்.

“Mr. Stephen. Room 412.”

மலர்கள் கொண்டு சென்றேன்.

அவர் படுக்கையில் இருந்தார். என்னைப் பார்த்து சிரித்தார்.

 எப்படி இருக்கீங்க?”

“இறக்கிறேன்… ஆனா நேத்து என் வாழ்க்கையை பார்த்துட்டேன்.”

நாங்கள் இரண்டு மணி நேரம் பேசினோம் —

அவரின் மனைவி, மாணவர்கள், தொடர்பு கொள்ளாத குழந்தைகள், வாழ்ந்த வாழ்க்கை…


இரண்டு வாரங்கள் தினமும் சென்றேன். காபி கொண்டு சென்றேன். செய்தி வாசித்துக் காட்டினேன். சில நேரம் அமைதியாக உட்கார்ந்தேன்.

அவர் எல்லாம் சொன்னார் — வருத்தங்கள், சந்தோஷங்கள், மறுபடியும் வாழ நினைக்கும் தருணங்கள்.


ஒருநாள் சொன்னார்:

“நான் தனியாக இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நீ இருக்கிறாய்”

நான் அவரது கையை பிடித்தேன்.

“நீங்க தனியா இறக்கமாட்டீங்க.”

அவர் அழுதார்.

“என்னை பார்த்ததற்கு நன்றி. நான் யாருக்கும் தெரியாதவனாக இருந்தேன்”

செவ்வாய்க்கிழமை காலை 4:28.

Mr. Stephen இறந்தார்.

அவரது கையை பிடித்தபடியே நான் இருந்தேன்.


அவரது கடைசி வார்த்தைகள்:

“மக்களிடம் சொல்லு… அந்நியர்களை உண்மையாகப் பாருங்கள். எல்லாரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சீக்கிரம். சிலர் மெதுவாக. ஆனாலும் எல்லாரும் ஒரே பாதை. அந்த பாதையில் கருணையா இருங்கள். நீ கருணையா இருந்தாய். என் கடைசி நாட்களை காப்பாற்றினாய்.”

அவர் கண்களை மூடினார்.

அவரது இறுதிச்சடங்கில் ஆறு பேர் மட்டுமே —

நான், மூன்று நர்ஸ்கள், ஒரு வழக்கறிஞர், ஒரு பழைய மாணவன்.


“Mr. Stephen எனக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுத்தார்.

ஒவ்வொரு அந்நியரும் ஒருவரின் முழு உலகம்.


ஒவ்வொரு பயணிக்கும் ஒரு கதை.

நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கிறார்கள்… யாராவது அவர்களை கவனிக்க வேண்டும் என நம்புகிறார்கள்.

அவர் 10,000 கொடுத்து தனது வாழ்க்கை முழுவதையும் பார்க்கச் சொன்னார். ஆனால் அவர் எனக்கு அதைவிட பெரிய ஒன்றை கொடுத்தார் — அந்நியர்களிடம் கருணை காட்டுவது கூடுதல் அல்ல… அது தான் வாழ்க்கையின் மையம்.

ஏனெனில் நாமெல்லாம் அந்நியர்கள்தான்…

யாராவது நின்று… பார்த்து… கேட்டு… நம்முடன் இருந்துவரை.”


அந்த 10000-ஐ நான் இன்னும் செலவழிக்கவில்லை. என் கார் க்ளோவ் பாக்ஸில் வைத்திருக்கிறேன் — அவர் நினைவாக.

1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths