லேபிள்கள்

செவ்வாய், 15 ஜூலை, 2025

KP ஜோதிடம் என்றால் என்ன?

 


KP ஜோதிடம் என்றால் என்ன? 

KP Astrology-ன் எளிமையையும் மகத்துவத்தையும் பாமரனும் புரியும் அறியும் வகையிலும் கொண்டு செல்வதற்காக படைக்கப்பட்டதே தவிர Vedic Astrology முறையை விமர்சனம் செய்வதற்காக அல்ல என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ஜோதிடத்தில், ஒருவரின் விதி அமைப்பை பற்றி தெளிவாக அறிய.. அவரின் ஜாதக கணிதம் என்பது மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும்.
பாரம்பரிய ஜோதிட முறையில்
 (In Vedic Astrology) ஜாதகம் என்றால் அது ராசி கட்டமும், நவாம்ச கட்டமும் தான்.

இந்த விஷயம் ஜோதிடர்கள், ஜோதிட ஆர்வலர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான மக்களும் அறிந்த ஒரு விஷயம் தான்.

உண்மையில், ராசி சக்கரம் போன்று மேலும் 10 சக்கரங்கள் உள்ளன. இந்த 10 சக்கரங்களை தான் தசவர்க்கம் என அழைத்தார்கள். நவாம்சம் என்பது இந்த 10 சக்கரங்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதாவது, 
ராசி சக்கரம் - பிரதானமானது. ஒரு குழந்தை பிறந்த போது இருந்த கிரக நிலைகளை பற்றி தெரிவிப்பது ஆகும்.

ராசி கட்டத்தில் உள்ள கிரக நிலைகளில் மாற்றம் ஏற்பட குறைந்தது 50 நிமிடங்கள் ஆகும். அது கூட லக்னப்புள்ளி தான் பயணிக்கும் நட்சத்திரத்தை மாற்றுவதால் ஏற்படும் மாற்றமே தவிர, 2 மணி நேரத்தில் நவகிரகங்களின் நகர்வில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.

இதனால் 2 மணி நேர இடைவெளி மேற்சொன்ன வர்க்க சக்கரங்களால் பயன் ஏதேனும் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். காரணம் இதற்கான விதிகளை மூல நூல்களில் கூட இல்லை.

குறுகிய கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களை வேறுபடுத்தி காட்டுவதற்காக இதை அறிமுகம் செய்தார்கள். ஆனால் இதற்காக விதிகள் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

ஜோதிட வட்டாரத்தில் ராசி கட்டத்துடன் நவாம்ச சக்கரம் மட்டுமே வழக்கத்தில் உள்ளது என்பதே அனைவரும் அறந்ததே. இதிலும் ஒரு சில ஜோதிடர்கள் வெறும் ராசி கட்டத்தை மட்டும் வைத்து பலன் சொல்லி வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.

இந்த ராசி மற்றும் நவாம்ச கட்டங்களில் உள்ள கிரக நிலைகளில் ஒரு சிறு மாற்றத்தை காண வேண்டும் என்றால் கூட நாம் குறைந்தது சுமார் 
13 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

அதாவது உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில், காலை
 10:00 மணியளவில் ஒரு குழந்தை பிறப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த குழந்தைக்கான ஜாதகத்தில் ராசி மற்றும் நவாம்ச கட்டத்தின் நிலைகள் என்ன வருகிறதோ, அதே தான் அப்படியே காலை சுமார் 10:12 மணி வரை இருக்கும்.

காலை 10:13 மணிக்கு பிறகே நவாம்ச கட்டத்தின் லக்ன நிலையில்  ஒரு சிறு மாற்றம் இருக்கும்.

அதாவது பிறந்த தேதி, பிறந்த இடத்தில் மாற்றம் இல்லாத போது..
பிறந்த நேரம் 
12 நிமிடங்கள் மாறினாலும் கூட, பாரம்பரிய முறைப்படி கணிக்கும் ஜாதகத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதே இங்கே கூற வருவது ஆகும்.

உதாரணத்திற்கு

இங்கே,Lalgudi என்கிற நகரத்தில்

07/11/2022 அன்று, மாலை 07:00 மணிக்கு பிறந்த குழந்தையின் ஜாதகத்தையும், அதே நாள், அதே இடத்தில் மாலை 07:00 மணிக்கு பிறந்த குழந்தையின் ஜாதகத்தையும் கொடுக்கப்பட்டுள்ளது. சற்று கவனமாக பார்வையிட வேண்டுகிறேன்.




மேலே கொடுத்துள்ள இரண்டு ஜாதகங்களும் (Mr. Ramesh & Mr. Suresh) திருக்கணித பஞ்சாங்க முறைப்படி, டிகிரி சுத்தமாக மிகவும் துல்லியமாக கணிக்கப்பட்டவை ஆகும்.

இருவரின் ஜாதகத்தில் வேறுபாடு ஏதேனும் இருக்கிறதா பாருங்கள். சிறு வித்தியாசம் கூட அல்ல.. ஒரே ஜாதகம் தான் வந்துள்ளது. ஆனால் பிறந்த நேரத்தில் இருவருக்கும் 13 வித்தியாசம் உள்ளதை (Birth Time for Mr. Ramesh: 07:00 PM & Birth Time for Mr. Suresh: 07:13 PM) வாசகர்கள் சற்று கவனிக்க வேண்டுகிறேன்.

இது போன்று, பாரம்பரிய ஜோதிட முறைப்படி ஜாதகங்கள் கணித்தால்.. சுமார் 13 நிமிட இடைவெளியில் பிறக்கும் அனைவருக்கும் ஒரே ஜாதகம் (ஒரே ராசிக் கட்டம் & நவாம்ச கட்டம்) தான் வரும்.

ஆனால் இரட்டைக் குழந்தைகள் பொதுவாக 3 அல்லது 4 நிமிட இடைவெளியில் பிறந்து விடுவதை நாம் பார்த்து வருகிறோம். ஆக அவர்கள் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி கணித்தால் ஒரே ஜாதகம் (ஒரே ராசி மற்றும் நவாம்ச கட்டம்) தானே வரும். இப்படி ஒரே ஜாதகம் தான் என்பதற்காக இருவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைந்து விடுமா என்ன??
நிச்சயமாக இல்லை.

சரி, இரட்டை குழந்தைகள் பிறப்பது கூட கொஞ்சம் அரிதான விஷயம் என்று எடுத்துக் கொண்டாலும், பிறப்பு விகிதம் என்பது படிப்படியாக அதிகரித்து கொண்டே வருவதால், 13 நிமிட இடைவெளிக்குள் ஒரே ஊரில் வெவ்வேறு தாய்மார்களுக்கு பல குழந்தைகள் பிறக்கின்றதே.

ஆக, இந்த ஜாதகம் கணிதம் செய்யும் முறையை சற்று மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஜோதிட துறைக்கு ஏற்பட்டது.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து காலஞ்சென்ற..
"ஜோதிட மாமேதை" "ஜோதிட மார்த்தாண்ட்" பெருமதிப்பிற்குரிய
 K. S. Krishnamurthy ஐயா அவர்கள் முன்னோர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 4 பிரிவுகளாக (4 பாதங்களாக) பிரித்ததை, நம் முன்னோர்கள் சொன்ன சில அடிப்படை விதிகளை அடிப்படை ஆதாரமாக வைத்தே ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 9 பிரிவுகளாக பிரித்து.. பின்னர் பல ஆராய்ச்சிகளின் பலனாக உபநட்சத்திரம் எனும் புதிய கோட்பாட்டை ஜோதிடத்தில் அறிமுகம் செய்தார்.

இந்த உபநட்சத்திர கோட்பாட்டின் 
(Sublord theory) மூலமாக ஜாதக கணிதத்தை மிகவும் துல்லியப்படுத்தி.. ஜோதிட உலகில் ஓர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் என்றால் அது மிகையாகாது.
அதாவது,

ஜோதிட மாமேதை K. S. Krishnamurthy ஐயா அவர்கள் கூறிய.. உபநட்சத்திர கோட்பாட்டின்படி ஜாதகம் கணிதம் செய்யப்படும் பொழுது.. பிறந்த நேரத்தில் வெறும் 30 வினாடி மாற்றம் செய்தாலே ஜாதகத்தில் கிரக நிலைகள் மாறுவதை நாம் தெளிவாக உணரலாம்.

பிறந்த நேரத்தில் வெறும் 
30 வினாடி மாற்றம் செய்தாலே ஜாதகத்தில் கிரக நிலைகள் மாறுகிறது எனில், இந்த KP ஜோதிட முறையில் கணிக்கப்படும் ஜாதகங்கள் எந்த அளவிற்கு துல்லியமானது என்பதை அன்பர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

ஜோதிட மாமேதை K. S. Krishnamurthy ஐயா அவர்கள் வழங்கிய உபநட்சத்திர கோட்பாட்டை பின்பற்றும் ஜோதிட முறைக்கு Krishnamurthy Paththathi என பெயரிடப்பட்டது. இதை தான் நாம் சுருக்கமாக KP Astrology என அழைக்கிறோம். (KP means Krishnamurthy Paththathi. பத்ததி என்பதற்கு வழி அல்லது ஜோதிட முறை என்பது பொருள் ஆகும்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...