லேபிள்கள்

வெள்ளி, 28 நவம்பர், 2025

பஞ்சாங்க பலன் பேசும் வார்த்தைகளால் பிறர் தெளிவு பெற வேண்டுமே தவிர வருந்துவது கூடாது.

பஞ்சாங்க பலன் 

 பேசும் வார்த்தைகளால் பிறர் தெளிவு பெற வேண்டுமே தவிர வருந்துவது கூடாது.


பற்கள் எல்லாம் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக கனவு கண்டார்.   மன்னர் ஒருவர் பீதியுடன் எழுந்தவர் அரண்மனை ஜோதிடருடன் ஆலோசித்தார்.  பஞ்சாங்கத்தைப் புரட்டிய ஜோதிடர் அரசே உங்களது மனைவி குழந்தைகள் உறவினர் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்துவிடுவார் என பலன் கூறினார்.

வெகுண்ட மன்னர் அவரை சிறையிலிட உத்தரவிட்டார்.  அதன் பிறகும் மனம் சமாதானமாகவில்லை. இன்னொரு ஜோதிடரிடம் கனவுக்கான பலன் கேட்டார்.  பஞ்சாங்கத்தை புரட்டிய அவர் நூராண்டு காலம் வாழ்வீரகள் மன்னா   சொந்த பந்தங்களில் நீண்ட காலம் வாழும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றார். பரிசுகள் வழங்கி கவுரவித்தார் மன்னர்.

இருவரும் பார்த்தது ஒரே பஞ்சாங்கம் என்றாலும் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார் ஒருவர்  இன்னொருவருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்  இது தான் வித்தியாசம். பேசும் வார்த்தைகளால் பிறர் தெளிவு பெற வேண்டுமே தவிர வருந்துவது கூடாது.

1 கருத்து:

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...