லேபிள்கள்

செவ்வாய், 2 டிசம்பர், 2025

தெருக்குறள்---வெள்ளத்துப்பால்

 


தெருக்குறள்; வெள்ளத்துப்பால்
-----------------------------------------------------------------------------------
தமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட 
வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை
அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்...ஒரு கற்பனை
-----------------------------------------------------------------------------------

மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

'போட்'டினில் பின் செல்பவர் 

----------

வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்

வேளச்சேரியில் வீடு கட்டியோர்

---------------------

மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்...இளைத்தார்

கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.

-------------------------

நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.

ஜலம் உள்ளே வருமாவென !

-----------------------------

சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்

மின்சாரம் போயினும் அஃதே !

-------------------------

வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல

உள்ளத்தோர் உதவா விடின்

----------------------------

நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்

ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.

---------------------------------

ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்

நாறிடும் பிழைப்பு என்றறி.

----------------------------------------------

தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்

தண்ணீரே நுழைந்தது பார்,

----------------------------------------------

ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்

நாஸ்தி ஆனதே சோகம்

------------------------------------------------------------ 

இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்

பொருள்கள் பாழாகும் நிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths