லேபிள்கள்

வியாழன், 4 டிசம்பர், 2025

மனதார நன்றி..

 


பூமியில் விழுந்த  விதை கூட 

எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது !


ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால்

கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது !


பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக

விழுங்கப்படும் நிலையிலிருக்கும்

சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன !


மனிதர்களால் எப்பொழுது

வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன !


ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல்

முயற்சி செய்கின்றன !


சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க

வேண்டிய கட்டாயத்திலிருக்கும்

எறும்புகள் கூட துவண்டு போகாமல்

வாழ்ந்து காட்டுகின்றன !


தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்

உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன !


ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை

பூச்சிகளும், அந்த ஒரு நாளில்

உருப்படியாக வாழ்கின்றன !


இப்படிப் பலகோடி உயிரினங்கள்

உலகில் வாழ முடியுமென்றால்

உன்னால் வாழ முடியாதோ ? ! ?


எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய

வாழ்க்கை . . .


அதை ஏன் புலம்பிக் கொண்டு

வாழ்கின்றாய்!


அதை ஏன் நொந்து போய்

வாழ்கின்றாய்!


அதை ஏன் வெறுத்துக் கொண்டு

வாழ்கின்றாய்!


அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய்!


அதை ஏன் அழுது கொண்டு

வாழ்கின்றாய்!


சந்தோஷமாகத் தான் வாழ்ந்து பாரேன்!


எனது அகம்பாவங்களைத்

தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத் தந்த என் கஷ்டங்களுக்கு

மனதார நன்றி!


என்னை அவமரியாதை செய்து

எனக்கு வைராக்கியம் வரக் காரணமான என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி!


எனக்கு வலியைத் தந்து அடுத்தவரின் வலியை எனக்குப் புரிய வைத்த புரியாத நோய்களுக்கு மனதார நன்றி!


எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடிச் சொல்லிக் கொடுத்த,என் பலவீனத்திற்கும், உடலுக்கும் மனதார நன்றி!


என்னை ஆழமாக சிந்திக்க வைக்க

எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த

என்னுடைய பிரச்சனைகளுக்கு

மனதார நன்றி!


என் பலத்தை நான் உணர்ந்து

என் வாழ்வை நானே நடத்தக் காரணமான என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு மனதார நன்றி!


என் உடல் உறுப்புகளின் மதிப்பை

எனக்குத் தெளிவாய் சொல்லிக் கொடுத்த உடல் ஊனமுற்றோருக்கு

என் மனதார நன்றி!


மனித வாழ்க்கை நிலையில்லாதது

என்பதை எனக்குத் தெளிவாகப்

புரிய வைத்த மரணத்திற்கு

மனதார நன்றி!


என் பெற்றோரின் பெருமையை,

என் புத்தியில் அழுத்தமாய் பதித்த

அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு மனதார நன்றி!


ஒரு சிரிப்பினால் உலகையே

வசப்படுத்த முடியும் என்பதை எனக்குச்

சுலபமாய் புரிய வைத்த குழந்தைகளுக்கு மனதார நன்றி!


பணத்தினால் மட்டுமே வாழ்வில்

எல்லா சுகமும் கிடைத்து விடாது

என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத

பணக்காரர்களுக்கு மனதார நன்றி!


ஒவ்வொரு முறையும் மனிதரிடம்

ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,

அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய என் இறைவனுக்கும் மனதார நன்றி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths