
நவீன ஞான மொழிகள் – 10
கெட்டவனுக்குக் கூட நன்மை செய், அது தப்பல்ல,
ஆனால், நல்லவனுக்கு மட்டும் கெடுதல் செய்யாதே……
அது தர்மம் அல்ல!
xxx
அன்று வயதைப் பார்த்து வந்தது மரியாதை,
இன்று வசதியைப் பார்த்துத் தான் வருகிறது.
xxxx
தேங்காய் உடைக்கிறார்கள், வாழ்க்கை சிதறிப்போகாமலிருக்க,
தேங்காய் பொறுக்குகிறார்கள், வாழ்க்கை சிதறிப்போனவரகள்…….
xxx

இதுவே உண்மை
FEMALE ல்ல MALE இருக்கு,
WOMAN ல்ல MAN இருக்கு,
SHE லே HE இருக்கு
MRS லே MR இருக்கு………..
xxx
உடம்புல வலி இருந்தா MOVE தடவலாம், மனசுல வலி இருந்தா
அந்த இடத்தை விட்டு MOVE ஆயிடு………
xxx
கல்யாணத்திற்கும், ஜல்லி கட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன???
வளர்த்தவன் எஸ்கேப் ஆகி விடுவான், அடக்க வரவன், மாட்டிக்குவான்!!!!
xxx
நம்மால் யாரையும் காயப்படுத்தாமல் வாழ முடியும்,
யாரிடமும் காயப்படாமல் தான் வாழ முடிவதில்லை……..
xxxx
எந்த ஒரு கண்ணாடியும் ஒரு பெண்ணை அழகில்லை என்று
சொன்னதில்லை !!!
xxxx
மரம் ஓய்வு எடுக்க விரும்பினாலும் காற்று அதனை சும்மா விடாது……
xxxx
பணம் சம்பாதிப்பது என்பது, குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல
செலவழிப்பது என்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல !!!
xxxx
உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசு
உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து காட்டு!!!
xxx
காது குத்திய அடையாளமும், மூக்கு குத்தின அடையாளமும்
தெரிந்து விடுகின்றன.
ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை!!!
xxxx
மௌனத்தின் பெருமை
சும்மா இருத்தல் சுகம்
மோனமென்பது ஞான வரம்பு
பேச்சு என்பது வெள்ளி
மௌனம் என்பது தங்கம்
xxxx
காதைக் கொடு வாயைக் கொடுக்காதே!!!
முட்டாளுக்கு நாக்கால் ஆபத்து,
புத்திசாலிக்கு மௌனத்தால் புகழ்!!!
மௌனத்தை யாரும் எழுதிக் கொடுக்க முடியாது !!!
xxxx
நீ உமிழ்ந்த தீ உன் மடியிலேயே விழும்…….
மௌனம் சர்வார்த்த சாதகம்
xxx
பழக வேண்டியது – முதுகுத் தண்டை நேராக வைத்தல்
மறக்க வேண்டியது – காபி, டீ, சிகரட், மது
செய்ய வேண்டியது – சர்வாங்காசனம்
செய்யக்கூடாதது – கெட்ட சகவாசம்
குறைக்க வேண்டியது – அதிக தூக்கம்
கூடவே கூடாதது – பகலில் தூக்கம்
துலக்க வேண்டியது – பகலிலும், இரவிலும் பற்களை
உடுக்க வேண்டியது – எளிய உடை
சேர்க்க வேண்டியது – ராகியும் கம்பும்
xxxx
கடவுளுக்கு கொடுத்து பக்தனாவதை விட
ஏழைக்குக் கொடுத்து இறைவனாகலாம்!!!
xxx
இறந்தவர்களுக்கு சிலை வைத்து மாலை போடுவதை விட
இல்லாதவர்க்கு இலை வைத்து சோறு போடுங்கள்……..
xxxx

அந்தக் காலத்தில் திரு வள்ளுவர் வாசுகியைக் கூப்பிட்டா
வாளி அப்படியே நிற்கும்,
இப்ப கூப்பிட்டா வாசுகி அப்படியே நிற்பா, வாளி பறந்து வரும் !!!
xxxx
காசு ஆணா??? பெண்ணா???
பொண்ணுதான் சார்…..
எப்படி???
தலைக்கு பின்னால் பூ இருக்கே !!!
xxxx
நீ முதலில் திருந்து, அதுவே உனக்கு மருந்து !!!
வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்
xxxx
உலகில் ஏழு பாவங்கள்
1.உழைப்பில்லாத சொத்து
2.மனச்சாட்சியில்லாத சொகுசு வாழ்க்கை
3.ஒழுக்கமில்லாத கல்வி
4.நாணயம் இல்லாத வார்த்தை
5.மனித நேயமில்லாத அறிவியல்
6.தியாகமில்லாத பிரார்த்தனை
7.கொள்கையில்லாத அரசியல்
Xxxx
வருமானம் என்பது தண்ணீர் போல
ஒரே இடத்திலிருந்து தான் வருது
செலவு எனபது வியர்வை போல,
எல்லா இடத்திலேர்ந்தும் வருது……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக