லேபிள்கள்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

‘நண்பர்களின் பற்றாக்குறை’



 ‘நண்பர்களின் பற்றாக்குறை’ - இதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!

இன்று உலகத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று ‘நண்பர்களின் பற்றாக்குறை’. நம்புவது கடினமாக இருந்தாலும் இது உண்மை.


புள்ளிவரங்கள் என்ன சொல்கின்றன?  

1960-ல் ஒரு நபருக்கு சராசரியாக 100 நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். 1990-ல் அந்த எண்ணிக்கை 50-ஆக குறைந்தது. 2020-ல் அது வெறும் 10-ஆக வந்துவிட்டது.


இப்போது? ஒரு உண்மையான நண்பர் கிடைப்பதே கஷ்டமாகிவிட்டது. சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் 12% பேருக்கு மனம் விட்டுப் பேச ஒரு நண்பர் கூட இல்லையாம்.


ஒரு காலத்தில் நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரம் நண்பர்களுடன் நேரில் செலவிட்டோம். இப்போது அது 35 நிமிடங்களாக சுருங்கிவிட்டது. ஸ்கிரீனுக்கு முன்னால் செலவிடும் நேரம் அதிகமானது, மனம் விட்டுப் பேசும் ஆட்கள் குறைந்துவிட்டார்கள்.


நட்பு = வாழ்க்கைக்கான இன்சூரன்ஸ்.  

நல்ல நண்பர்கள் உண்மையிலேயே ‘லைஃப் இன்சூரன்ஸ்’ மாதிரி. ஏனென்றால்


1. ஆரோக்கியத்திற்கு நல்லது: நண்பர்கள் இல்லாத தனிமை, நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் குடிப்பதற்கு சமம் என்று ஆராய்சிகள் சொல்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு அவர்களை ஆட்கொள்கிறது.

2. இதயத்திற்கு உறுதி: நல்ல நண்பர்கள் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

3. சுறுசுறுப்பான வாழ்கை: நண்பர்களுடன் இருந்தால் சந்தோஷமாக இருக்கும். சேர்ந்து உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது, புதிய விஷயங்களை ஆரம்பிப்பது எளிதாகிறது. அவர்களின் துணை நம் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கிறது.


நட்பு என்பது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அல்ல.  

நட்பு தானாக உருவாகாது. அதற்கு ‘நேரம்’ என்ற மிகப்பெரிய முதலீடு தேவை.


உளவியலாளர்களின் கணக்குப்படி  

ஒரு நபருடன் குறைந்தபட்சம் பழக்கமாக 40 மணி நேரம் சேர்ந்து இருக்க வேண்டும்.  

அது ஒருவித நட்பாக மாற இன்னும் 90 மணி நேரம் தேவை.  

‘உயிர் நண்பர்’ என்ற நிலைக்கு வர இன்னும் 40 மணி நேரம் தேவை.  

மொத்தம் சுமார் 170 மணி நேரம்! இந்த ஓட்ட வாழ்க்கையில் நம்மிடம் அவ்வளவு நேரம் இருக்கிறதா?


ஒருமுறை நல்ல நட்பு உருவான பிறகு அதை தக்கவைக்கவும் தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும். செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போல, நட்புக்கும் ‘பேச்சு’ என்ற தண்ணீர் தேவை.


இது நட்பா? ஒருமுறை யோசியுங்கள்:  

1. ஆபீஸ் நட்புகள்: நாம் ‘நட்பு’ என்று நினைப்பது பெரும்பாலும் தேவைக்காக, மேலோட்டமான வாழ்த்துக்களே.  

2. சோசியல் மீடியா நட்புகள்: ஃபேஸ்புக்கில் 5000 நண்பர்கள், வாட்ஸ்அப்பில் 100 குரூப்கள் இருந்தாலும், கஷ்டத்தில் உதவ ஒருவரும் இருக்க மாட்டார்கள். இவை பெரும்பாலும் ‘பொழுதுபோக்கு’ பேச்சுகளே.  

3. பார் & ரெஸ்டாரண்ட் நட்புகள்: கிளாஸ் காலியாகும் வரை உள்ள பேச்சுகள், சிரிப்புகள். போதை இறங்கினால் ஆள் காணாமல் போய்விடுவார்.


அசல் பிரச்சனை எங்கே?  

நட்பின் பிணைப்புகள் ஏன் அறுந்து போகின்றன என்றால் காரணங்கள் நிறைய இருக்கின்றன. டெக்னாலஜி, நியூக்ளியர் குடும்பங்கள், போட்டி நிறைந்த உலகம்... ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய காரணம் ஒன்றே.  

“நேரமில்லை நண்பா!”


பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாறிவிட்டோம். உறவுகளை தக்கவைப்பதை மறந்துவிட்டோம்.


இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்:  

1. நேரம் ஒதுக்குங்கள்: நாளில் 15 நிமிடமாவது நண்பர்களுக்கு போன் செய்து பேசுங்கள். வாரத்தில் ஒருமுறையாவது சந்தியுங்கள்.  

2. தரமான நேரம் கொடுங்கள்: சந்திக்கும்போது போனை ஓரமாக வைத்துவிட்டு மனம் விட்டுப் பேசுங்கள்.  

3. புதிய நட்புகளை வரவேற்கவும்: வாக்கிங் போகும்போது, புதிய கிளாஸில் சேரும்போது மக்களுடன் பேச்சு கொடுங்கள்.  

4. இருக்கும் நட்புகளை பாதுகாக்கவும்: சின்ன சின்ன கோபங்களுக்காக விலைமதிப்பற்ற நட்பை விட்டுவிடாதீர்கள். ‘சாரி’, ‘நன்றி’ சொல்ல தயங்காதீர்கள்.

நினைவில் கொள்ளுங்கள், கடைசி மூச்சு வரை நம்முடன் வருவது பேங்க் பேலன்ஸ் அல்ல, நல்ல நண்பர்கள் மட்டுமே.

அதனால் இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள். உங்கள் போன் காண்டாக்ட் லிஸ்டை திருப்புங்கள். நீண்ட நாட்களாக பேசாத அந்த ‘பெஸ்ட் பிரெண்ட்’க்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்.

நட்பை பாதுகாப்போம். நம்மை நாமே பாதுகாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

🚗 புதிய கார்… கல்லூரி நண்பர்கள் சுற்றுலா… “பத்திரமாகச் செல்… பத்திரமாகத் திரும்பு.”

  ஒரு புதிய கார்… கல்லூரி நண்பர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு சுற்றுலா… மனதில் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய பயணம்… ஆனால் ஒரு இரவு…...