லேபிள்கள்

சனி, 22 ஜூன், 2024

உணவு உண்ணும் முறை

 



எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட உணவு உண்ணும் முறைவேண்டும்?

வெள்ளையாகத் உள்ள எல்லா பொருளும் உயர்ந்தது என்ற தவறான மனப்பான்மையில் அவற்றை உட்கொள்றோம். இதனால் விளையும் கேடுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

உணவு உண்ணும் முறை...

அதிக உணவால் நாம் வயிற்றை நிரப்புகிரோம் என்பதை விட நோயை வரவழைத்துக்கொள்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆண்களை விட பெண்கள் குறைவாகத்தான் சாப்பிடுவார்கள். நோய் அப்படித்தான் துவங்குகிறது.Bottom of Form

தற்போது நாம் உணவை நமது மனம்தான் முடிவு செய்கிறது. மனதுக்கும் உணவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதை உண்ண வேண்டும் என உடலைக் கவனித்து வழங்கக் கற்றுக்கொண்டால், தானாகவே நாம் சரியான உணவை உட்கொள்வோம்!

பழம், காய்கறி, இறைச்சி என எதுவாக இருந்தாலும், நாம் இன்னொரு உயிரை உணவாக்கிக்கொண்டு இருக்கின்றோம் என்ற விழிப்புணர்வுடன் இருந்தால், நாம் கண்மூடித்தனமாக சாப்பிடுவதை நிறுத்துவோம். நமக்கு  தேவையானதற்கு மேல், உண்ணமாட்டோம். பூமியில் ஆழமான அன்போடும், நன்றியுணர்வோடும் வாழ்வீர்கள்!

அஸ்கா சர்க்கரை

நாம் சாப்பிடும் சர்க்கரை வெள்ளை நிறத்தில் வருவதற்காக சில ரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அந்த ரசாயனங்களின் சர்க்கரையிலேயே கலந்து வருகின்றன. நாம் சர்க்கரையை அதிகம் பயன்படுத்தும்போது அந்த ரசாயனங்கள் நம்முடைய  க்ரோமோசோம் அமைப்பைப் பாதிக்கின்றன.

க்ரோமோசோம் என்றால், நம் நிறம் நமது தாயாரைப் போல் இருக்க வேண்டும், நமது மூக்கு நமது தந்தையின் மூக்கைப் போல இருக்க வேண்டும், நமது கண்கள் நமது தாத்தாவின் கண்கள் போல இருக்க வேண்டும் போன்ற பல தகவல்களும் இந்த க்ரோமோசோம்களில் பதிந்திருக்கின்றன.

நாம் இன்னமும் அதைப்பற்றி முழுமையாக அறியவில்லை. இத்தகைய குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டால், அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தும்போது, உங்களுடைய உடல்நலம் மட்டுமல்ல, உங்கள் சந்ததியினரின் உடல்நலமும் பாதிக்கப்படும்.

சர்க்கரைக்குப் பதிலாக அழுக்காகத் தெரியும் கருப்பட்டி மிகச்சிறந்தது!

நமக்காக அற்புதமாகச் சமைத்து வழங்கப்படும் உணவு பரிமாறப்பட்டவுடன், முகத்தைச் சுளித்து, பழிப்பு காட்டினீர்கள் என்றால், அடுத்த வேளை உங்களுக்கு சமைக்க வேண்டுமா வேண்டாமா என்று சமைத்தவர்களுக்கு யோசனை வந்துவிடும். மாறாக, பரிமாறப்பட்டதை மகிழ்ச்சியுடனும், நன்றியோடும் ஏற்றுக்கொண்டால் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மீண்டும் கிடைக்கும். வாழ்வின் ஒவ்வோர் அம்சமும் அப்படித்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...