கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
நல்ல பழக்கங்களின் மூலம் மனதில் எழும் தீய ஆசைகளைக் கட்டுப்படுத்தவோ அகற்றவோ முடியும்.
மனதுடன் போர் நடத்தாதீர்கள். தியானத்தால் ஒருநிலைப்படுத்துங்கள். இதுவே மகிழ்ச்சிக்கான வழி.
பால், பழம் போன்ற சாத்வீக உணவை சாப்பிட்டால் மனதில் அமைதியும், ஆனந்தமும் குடியிருக்கும்.
தண்ணீரில் உப்பைக் கரைப்பது போல மனம் எப்போதும் இறைச் சிந்தனையிலேயே இருக்கட்டும்.
ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள்.
வாரம் ஒருமுறையாவது கோவிலுக்குச் செல்லுங்கள். மனம் ஒன்றி பக்தியில் ஈடுபடுங்கள்.
அதிகாலையில் கண் விழிப்பதும், இரவில் முன்நேரத்தில் துாங்கச் செல்வதும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
வாழ்க வளமுடன்


We should follow this healthy habit of early to bed and early rising.
பதிலளிநீக்கு