அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அரசு செய்த சிறப்பான திட்டம் இது.
இதில் பயன்பெற அரசின் எந்த மருத்துவமனையிலும் நம் உடல் பரிசோதனை செய்து தேவையான மாத்திரைகளை கொடுப்பார்கள்.
பின்னர், நம் வீட்டின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அந்த சீட்டினை கொடுத்தால் அவர்கள் நாம் கொடுக்கும் நோட்டு புத்தகத்தில் உங்கள் ஆதார் அட்டை விவரப்படி ஒரு பார்கோட் அட்டையை இணைத்து அந்த மாத மருந்துகளையும், போட்டோவில் உள்ள ஒரு பிளாஸ்டிக் டப்பாவையும் தருவார்கள். அடுத்து ஒவ்வொரு மாதமும் நம் வீட்டிற்கே வந்து நோட்டு புத்தகத்தில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்து நமக்கான மருந்துகளை தருகிறார்கள்.
நாம் வீட்டில் இல்லாவிட்டால் நம் வீட்டில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் நேரில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.
சுகர், கொலஸ்ட்ரால், BPபோன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதில் ஏதேனும் முறைகேடு இருந்தால் 104 என்ற எண்ணிற்கு போன் செய்து ஆலோசனை கேட்கலாம், புகாரும் செய்யலாம்.

பொது மக்கள் இந்த சேகையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
பதிலளிநீக்கு