லேபிள்கள்

ஞாயிறு, 23 நவம்பர், 2025

வீடுகளுக்குச் சென்றால் குருடனாகவும் வெளியே வந்தால் ஊமையாகவும இருந்து விடுங்கள்!

 


யாரிடம் பேசும்போதும் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் அவர்கள் போகிறபோக்கில் அள்ளி வீசிவிட்டு சென்று விடுவார்கள்...

இரண்டு நபர்கள் சந்தித்து கொள்கிறார்கள்
ஒருவர் : நீ எங்கே வேலை செய்கிறாய்?
மற்றவன்: இன்னாரின் நிறுவனத்தில்.
அவன் : எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்?
இவன்: 30 ஆயிரம் தான்.
அவன்: ஓ...ஹ்! இந்த வேலைக்கு இது போதாதே!
உன் முயற்சியை அவர்கள் மதிப்பதில்லை போல! வாழ்க்கை செலவுகளை எப்படி சமாளிக்கிறாய்?
என்ற வார்த்தை குண்டை போட்டுவிட்டு அவன் சென்றுவிடுகிறான்.
இவனோ அவன் சொல்வது சரிதான், என்று கருதி வேலையில் ஆர்வம் குறைந்து, சலிப்புடனே மறுநாள் வேலைக்கு செல்கிறான். நிறுவன உரிமையாளரிடம் சம்பளம் கூட்டிக் கேட்கிறான்.
உரிமையாளரோ "முடியாது" என்கிறார். இவன் வேலையை விட்டு விடுகிறான்.
இப்போது இவன் வேலை இன்றி வெட்டியாக இருக்கின்றான்.
2
👉
இரு பெண்கள் சந்திக்கின்றனர்.
ஒருவள்: உன் கணவன், உனக்கு குழந்தை பிறந்ததற்காக உனக்கு என்ன அன்பளிப்பு செய்தார்?
மற்றவள்: எதுவும் தரவில்லை.
அவள்: ஏன் இப்படி! உன்னைப் பற்றி அவரிடம் எந்த மதிப்பும் இல்லையா...?' பாசம் இல்லையா..?
என்று அவள் சின்ன புகைச்சலை போட்டுவிட்டு சென்றுவிடுகிறாள்.
இவளின் மனதிலோ கணவனை பற்றிய மதிப்பு குறைகிறது. கவலையடைகிறாள்...
கணவன் வந்தவுடன் கோபத்துடன் தர்க்கம் செய்கிறாள். அதனால் சன்டை முற்றி அவன் அவளை விவாகரத்து செய்துவிடுகிறான்.
இப்போது இவள் விதவையாகிவிட்டாள்.
இது போன்றே...
3
👉
இரு நண்பர்களுக்கு மத்தியிலும்...
4
👉
தந்தை மகனுக்கு மத்தியிலும்...
இப்படியான கிண்டல் கிளறல்களை உண்டாக்கி பிரிவை உண்டாக்கும் நயவஞ்சகர்கள் நம்மிடையே நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏன் இன்னும் இதனை வாங்கவில்லை...?
ஏன் இன்னும் திருமணம் முடிக்கவில்லை...?
எவ்வளவு காலம்தான் இவரை சகித்துக் கொள்வாய்...?
இப்படி ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்...?
இப்படிச் செய்யலாமா???
அப்படிச் செய்யலாமா???
இப்படி சிலரின்
தேவையற்ற கேள்விகள், விவரமற்ற வார்த்தைகள், கிண்டிப் பார்க்கும் ஆர்வங்கள், கிளறிப் பார்க்கும் பழக்கங்கள் கேட்க அழகாகவும், பார்க்க புண்ணியம் போன்றும் தோன்றும்...
ஆனால், அவைகளே வார்த்தை வடிவில் அவதாரம் எடுத்து சைத்தான்களாக வந்து, குடும்பங்களில் பெரும் வெடிப்பை தோற்றுவிக்கிறன, உறவுகளுக்குள் நீண்ட விரிசல்களை உண்டாக்கிவிடுகின்றன. சொந்த பந்தங்களை இன்னுமின்னும் பிரித்து வைத்துவிடுகின்றன.

எனவே...
பிரச்சினைகளை, பிரிவினைகளை தோற்றுவிக்கக் கூடியவர்களின் சொற்களை கவனத்தில் கொள்ளாதீர்.

வீடுகளுக்குச் சென்றால் குருடனாகவும் வெளியே வந்தால் ஊமையாகவும இருந்து விடுங்கள்!

நீங்கள் உங்கள் சுய சிந்தனையோடு இருங்கள்...

1 கருத்து:

  1. நயவஞ்சகர்கள் நம்மிடையே நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை விலக்கி வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...